Tuesday, November 4, 2014

ஆரோக்­கி­ய­மான புத்திக் கூர்­மை­யுள்ள குழந்­தையைப் பெற்­றெ­டுக்க வேண்­டு­மென்­பது சகல தாய்­மா­ரி­னதும் நோக்­க­மாகும். அதனை அடை­வ­தற்கு கர்ப்ப காலத்தில் தாயி­னது உணவு சிறப்­பாக இருக்க வேண்டும். இதற்கு இலா­ப­க­ர­மா­னதும் இல­கு­வா­ன­து­மான முறையில் உணவைப் பெறு­வ­தற்கு சரி­யான ஆலோ­ச­னைகள் தாய்­மா­ருக்கு முக்­கி­ய­மா­னது.
பிர­தான உணவு வேளை­க­ளுக்கு மேல­தி­க­மாக சிற்­றுண்­டி­களை உட்­கொள்­வ­தற்கும் கிளினிக் மூலம் வழங்­கப்­படும் விற்­ற­மின்­களை உண்­ப­தற்கும் தாய்­மா­ருக்கு சரி­யான ஆலோ­சனை வழங்­கப்­படல் வேண்டும்.
தாயின் போஷாக்­கினை அள­வி­டு­வ­தற்கு உய­ரத்­திற்குப் பொருத்­த­மான நிறை­யுள்­ளதா என ஆராய்ந்­த­றி­வது அவ­சி­ய­மாகும். இதனை உடற்­தி­ணிவுச் சுட்டி (BMI) என அழைக்­கப்­படும். BMI 18.5 ஐ விடக் குறை­வாயின் போசணை மட்­டத்தில் குறைந்து செல்­வ­தாகக் கரு­தப்­படும். கர்ப்ப காலத்தில் நிறை அதி­க­ரித்தல் தொடர்­பாக விசேட கவனம் செலுத்­தப்­படல் வேண்டும். இதன் மூலம் நல்ல பிறப்பு நிறை கொண்ட குழந்­தை­யொன்றை பெறும் சந்­தர்ப்பம் ஏற்­படும்.கர்ப்ப காலம் முழு­வதும் தாயின் உடல்­நிறை 12-–14 Kg அள­வு­வரை அதி­க­ரிக்கும்.இரத்தச் சோகை குறித்துக் கர்ப்­பிணிப் பெண்கள் அறிந்­தி­ருத்தல் அவ­சியம்.

இரத்தச் சோகை உள்­ளதா? என அறி­வ­தற்கு கிளி­னிக்­கு­களில் ஹீமோ குளோ­பினின் அளவை இரத்­தத்தில் பார்ப்­பது அவ­சியம். இரத்­தத்தில் ஹீமோ­கு­ளோ­பினின் அளவு குறை­வாக இருந்தால் கர்ப்ப காலத்­திலும் பிர­சவ நேரத்­திலும் பாரிய பிரச்­சி­னைகள் ஏற்­ப­டலாம். அத்­துடன் குழந்­தையின் பிறப்பு நிறையும் குறை­வ­டையும். ஹீமோ­கு­ளோ­பினின் அளவு 11g ஐ விட அதி­க­மானால் இது திருப்­தி­க­ர­மான நிலை உள்­ள­தெ­னவும் 11g ஐ விட குறை­வானால் இது இரத்தச் சோகை நிலை எனவும் கரு­தப்­ப­டு­கின்­றது.இச்­சந்­தர்ப்­பத்தில் மருத்­து­வர்கள் தரும் விசேட ஆலோ­ச­னை­களைப் பின்­பற்­று­வ­துடன் கிளி­னிக்­கு­களில் தரப்­படும் இரும்­புச்­சத்து குளி­சை­க­ளுக்கு மேல­தி­க­மாக இரும்­புச்­சத்து (IRON) அடங்­கிய உணவு வகை­களை உண­வுடன் சேர்த்துக் கொள்­வதும் அவ­சி­ய­மாகும்.ஹீமோ­கு­ளோ­பினின் அளவு மேலும் 7g க்கு குறை­வானால் அது அதிக இரத்­தச்­சோகை நிலை­யாகும். இச்­சந்­தர்ப்­பத்தில் அப்­பெண்ணை வைத்­தி­ய­சா­லையில் அனு­ ம­தித்து சிகிச்­சை­ய­ளிக்க வேண்­டி­யி­ருக்கும்.
கர்ப்ப காலத்தில் பெண்­ணொ­ரு­வ­ருக்கு வழங்­கப்­படும் குளிசை வகைகள்...
01) முதல் 12 கிழ­மை­க­ளுக்குள் போலிக் அமிலக் குளிசை (Folic Acid) நாளாந்தம் ஒரு குளிசை வீதம் 12 கிழ­மை­க­ளுக்கு எடுக்க வேண்டும்.
இது சிசுவின் மூளை மற்றும் நரம்பு மண்­டல வளர்ச்­சிக்கு அவ­சி­ய­மாகும்.

02) முதல் 12 கிழ­மை­களின் பின் நாளாந்தம் ஒரு இருப்­புச்­சத்து குளி­சையும் விற்­றமின் C குளிசை ஒன்றும் இரவு உணவின் பின் எடுக்­கப்­பட வேண்டும்.
இரத்­தச்­சோகை பிரச்­சி­னையை தவிர் த்துக் கொள்­வ­தற்கு இக்­கு­ளி­சைகள் உத­வு­கின்­றன.

03) கர்ப்ப காலத்தில் 5 மாதங்­களில் வைத்­தி­யரால் சிபாரிசு செய்­யப்­ப­டும் பூச்சிக் குளி­சைகள் உட்­கொள்­ளப்­பட வேண்டும். (WORM TREATMENT) வயிற்றுப் புழுக்­க­ளி­லி­ருந்து பாது­காப்புப் பெறவும் இரத்தச் சோகை வராமல் காப்­ப­தற்கும் இவை உத­வு­கின்­றன.
தேயிலை, கோப்பி, பால் போன்­றன இருப்­புச்­சத்து குளி­சை­களில் மற்றும் உண­வு­களில் அடங்­கி­யுள்ள இரும்­புச்­சத்து உட­லினால் உறிஞ்­சப்­ப­டு­வதைத் தடுப்­ப­தனால் பிர­தான உணவு வேளைக்கு ஒரு மணித்­தி­யா­லத்­திற்கு முன்­னரும் மற்றும் உணவின் பின் ஒரு மணித்­தி­யா­லத்­திற்கும் அப்­ப­டி­யான பானங்­களை அருந்­தாமல் இருத்தல் பொருத்­த­மா­னது.
விற்­றமின் C குளி­சை­யி­னாலும் உணவின் பின் உட்­கொள்­ளப்­படும் பழங்­க­ளி­னாலும் உடம்­பினுள் இரும்புச் சத்து உறிஞ்­சப்­ப­டு­வது இல­கு­வாக்­கப்­ப­டு­கின்­றது.


04) வேறு நோய்கள் இருந்து அவற்­றுக்­காக மாத்­தி­ரைகள் பாவித்துக் கொண்­டி­ருப்பின் கிளி­னிக்­கிற்கு வந்த முதல் நாளி­லேயே அந்த விட­யத்தை வைத்­தி­யரின் கவ­னத்­திற்குக் கொண்டு வந்து அவ­ரது ஆலோ­ச­னையைப் பெற்­றுக்­கொள்ள வேண்டும்.
05) கர்ப்ப காலத்தில் மருத்­துவ ஆலோ­சனை இன்றி எந்த வேளை­யிலும் எந்த மருந்­தி­னையும் பாவிக்கக் கூடாது. ஏதேனும் நோய்க்கு ஆளானால் முடிந்­த­ளவு விரை­வாக வைத்­தி­யரை நாடி ஆலோ­சனை பெறுதல் அவ­சி­ய­மாகும்.
06) கர்ப்­பத்துள் வளரும் குழந்தை பூர­ண­மாகப் போஷாக்­கினை பெற்­றுக்­கொள்­வது தாய் உள்­ளெ­டுக்கும் உண­வு­க­ளி­லி­ருந்தே. ஆதலால் குழந்­தையின் ஆரோக்­கி­ய­மான விருத்­தியைக் கருத்­திற்­கொண்டு உள்­ளெ­ டுக்கும் உண­வு­களில் கவ­னஞ்­செ­லுத்­து தல் வேண்டும்.
07) முதல் 2–3 மாதங்­களில் உட்­கொள்ளும் உணவு சுவை­யின்றி அல்­லது உணவில் விருப்­ப­மின்றி இருந்தால் நாட்டுப் பழ­வ­கைகள், இளநீர், மரக்­க­றிசூப், பிஸ்கட் போன்­ற­வற்றை உட்­கொள்­ளலாம். அது­மட்­டு­மன்றி ஏனைய நாட்­களில் தான் உட்­கொண்ட பிடித்­த­மான உண­வு­களை வழக்­கப்­படி உட்­கொள்­ளலாம்.
புதிய பழங்­க­ளான வாழை, நெல்லி, வெரளு, விளா, கொய்யா, பழுத்த பப்­பாசி, பழுத்த அன்­னாசி போன்­ற­வற்றை உட்­கொள்­வதன் மூலம் தாய்க்கும் சேய்க்கும் தேவை­யான விற்­றமின் போசணைப் பதார்த்­தங்­களை இல­கு­வாகப் பெற்­றுக்­கொள்­ளலாம்.


08) ஏனைய நாட்­களை விட சோறின் அளவு சற்றுக் கூடு­த­லாக உள்­ளெ­டுக்­கப்­பட வேண்டும். மரக்­கறி, கீரை­வகை, பருப்பு, அவரை மற்றும் விதை வகைகள் மற்­றைய நாட்­களை விட சற்றுக் கூடு­த­லாக உண­வுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* இய­லு­மான எல்லா வேளை­க­ளிலும் மீன், இறைச்சி அல்­லது நெத்­திலி உண­வுடன் சேர்த்தல் பொருத்­த­மா­னது.
* மீன் இறைச்சி உட்­கொள்­ளா­த­வ­ராயின் அதற்குப் பதி­லாக சோயா, பயறு, கடலை, கௌபி போன்ற அவரை வகை­களைக் கொண்ட உண­வு­களை அதிகம் எடுத்தல் வேண்டும்.
* வாரத்­துக்கு 3 முட்­டைகள் வீதம் உண­வுடன் சேர்த்துக் கொள்ளல் போது­மா­ன­தாகும்.
* இல­கு­வாகக் கிடைக்கக் கூடிய வச­திகள் இருக்­கு­மானால் ஒரு நாளைக்கு ஒரு தடவை ஒரு கிளாஸ் பால் அல்­லது யோகட், தயிர் போன்ற பாலு­ண­வு­களை உட்­கொள்­வது அவ­சி­ய­மாகும்.
* பிர­தான உணவின் பின் நாளைக்கு இரண்டு தட­வை­க­ளா­வது பழ­மொன்றை உட்­கொள்ள வேண்டும்.
கர்ப்ப காலத்தில் அதிக தாய்­மா­ருக்கு ஏற்­ப­டு­கின்ற மலச்­சிக்கல் போன்­றன ஏற்­ப­டா­தி­ருக்க நார் சேர்ந்த மரக்­கறி, பழங்கள், கீரை­களை உண­வுடன் சேர்த்துக் கொள்ளல் வேண்டும். கீரை வகை­களை உண­வுக்­கென உட்­கொள்ளும் போது முடிந்­த­ளவு பச்­சை­யாக சலாது செய்து தயார்­ப­டுத்தல் சிறந்­தது. அதனால் அதி­லி­ருந்து போஷாக்கு பாது­காக்­கப்­படும்.

உ+ம்- வல்­லாரை, பொன்­னாங்­கண்ணி, அகத்தி போன்­ற­வற்றை சிறி­தாக வெட்டி சலாது செய்­யலாம் )

உங்­க­ளது BMI பெறு­மானம் 18.5 ஐ விடக் குறை­வாயின் மாச்­சத்து மற்றும் கொழுப்­புச்­சத்து நிறைந்த உண­வு­களை உள்­ளெ­டுப்­பது சிறந்­தது.
கடை­களில் கிடைக்கும் சமைத்த உண­வு­களை தவிர்த்து வீட்டில் சுத்­த­மாக சமைத்த உண­வினை எடுப்­ப­தற்கும் கொதித்­தா­றிய நீரினைப் பரு­கு­வ­தற்கும் பழகிக் கொள்ள வேண்டும். எந்த வேளை­யிலும் இயற்கை உண­வு­களை உட்­கொள்­ளவும் தர­மற்ற செயற்கை பதார்த்­தங்­களை தவிர்க்­கவும்
 
கவ­னத்­திற்­கொள்ள வேண்­டிய
ஏனைய விடயங்கள்


* கர்ப்ப காலத்தில் பெண்கள் தமது உடற்சுத்தத்தைப் பேண வேண்டும். அத்துடன் அணியும் ஆடைகள் உள்ளா டைகளை தினமும் கழுவிச் சுத்தமாக பாவிக்க வேண்டும்.
* பற்சுகாதாரம் பற்றிக் கவனித்தல் அவசியம். தினமும் பிரதான உணவு வேளையின் பின் பற்பசை கொண்டு பற்தூரிகையினால் பல்லை துலக்குதல் பொருத்தமானது.
* மேலதிகமாக பல் வலி போன்ற நோய் அறிகுறிகள் இருப்பின் பல் வைத்தியரின் ஆலோசனையைப் பெற வேண்டும். கர்ப்ப காலத்தில் தொற்று நோய்களிலிருந்து தவிர்த்துக்கொள்ள வேண்டும். நோய்கள் தொற்றக்கூடிய பொது மக்கள் கூடும் இடங்கள், வைத்தியசாலைகள், நோயா ளிகள், வீடுகள் போன்ற இடங்களுக்கு செல்வதைத் தவிர்த்தல் வேண்டும்.

No comments:

Post a Comment