Tuesday, June 24, 2014


சிறு­பான்மை சமூ­க­மொன்றின் மீது கட்ட­விழ்த்து விடப்­ப­டு­கின்ற அதி தீவிர வன்­மு­றை­களின் உச்­சக்­கட்ட நிகழ்­வுதான் களுத்­துறை மாவட்­டத்­தி­லுள்ள அளுத்­கம, பேரு­வளை, தர்­கா­நகர் மற்றும் பதுளை, தெஹி­வளைப் பகு­தியில் நடந்த கொடு­மை­களும் கொடூ­ரங்­க­ளு­மாகும். சுதந்­தி­ரத்­துக்கு பின்­னைய கடந்த ஆறரை தசாப்த காலத்தில் இலங்­கையில் வாழு­கின்ற சிறு­பான்மை சமூகம் அமை­தி­யா­கவும் நிம்­ம­தி­யா­கவும் சந்­தோ­ஷ­மா­கவும் வாழ்ந்­த­தாக சரித்­திரக் குறிப்பில் எந்த இடத்­திலும் எழு­தப்­பட்­ட­தாகத் தெரி­ய­வில்லை.இந்த வன்­மங்­களும் இனச்­சீ­றல்­களும் கொடு­மை­களும் ஏன் நடக்­கின்­றன என்­ப­தற்­கு­ரிய நதி மூலமும் இன்னும் கண்­டு­பி­டிக்­கப்­ப­டாத சூத்­தி­ர­மா­கவே காணப்­ப­டு­கின்­றது. களுத்­துறை மாவட்­டத்­தி­லுள்ள தர்­கா­நகர், பேரு­வளை பகு­தியில் கட்­ட­விழ்த்து விடப்­பட்ட இனச்­சீ­ற­லுக்கு நான்கு அப்­பாவி மக்கள் கொல்­லப்­பட்டும் 80 பேருக்கும் மேற்­பட்­ட­வர்கள் படு­கா­ய­ம­டைந்தும் கோடிக்­க­ணக்­கான சொத்­துக்கள் துவம்சம் செய்­யப்­பட்டும் கொள்­ளை­ய­டிக்­கப்­பட்டும் ஒரு அனர்த்த விழாவைக் கொண்­டா­டி­யி­ருக்­கி­றது பேரி­ன­வாத சமூ­கத்தின் அமைப்­பொன்று.
 
வாள்­வெட்டு, பொல்­லடி, கல்­லெறி, கடை­யெ­ரிப்பு, துப்­பாக்­கிச்­சூடு, சூறை­யாட்டம் என்று எல்லா வகை கொடூ­ரங்­களும் இங்கே நடந்­தே­றி­யி­ருக்­கின்­றன. சட்­டத்­தையும் ஒழுங்­கையும் பாது­காக்க வேண்­டிய சீருடை பிர­ம்மாக்கள் கைகட்டி பார்த்துக் கொண்­டி­ருந்­தி­ருக்­கி­றார்கள். அளுத்­கம நகரில் கூட்டம் போட்டு பேசிய பொது பல­சேனா அமைப்பின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் இன­வாத விஷத்தை இப்­படி கக்­கி­யி­ருக்­கின்றார். இந்­நாட்டில் நாங்கள் சிங்­களப் பொலிஸை வைத்­தி­ருக்­கிறோம், சிங்­கள இரா­ணுவம் இருக்­கின்­றது. இவற்றின் பின் மரக்­க­லா­யவோ அல்­லது ஒரு­ப­றை­யாவோ சிங்­க­ள­வரைத் தொட்டால் அதுவே அவர்­க­ளது முடி­வாகும்.இதைப் பேசி­யவர் பௌத்த மதத்தின் பஞ்­ச­சீலக் கொள்­கை­களை தாரக மந்­தி­ர­மாக உச்­ச­ரிக்கும் ஒரு பௌத்த துறவி.
 
சில தினங்­க­ளுக்கு முன் அளுத்­கம நகரில் பிக்கு ஒரு­வரை முஸ்லிம் இளை­ஞர்கள் சிலர் தாக்­கி­ய­தாக குற்றம் சாட்­டப்­பட்டு இதன் எதிர்­வி­ளை­வாக பொது ப­ல­ சேனாவின் செய­லாளர் ஞான­சார தேரர் தலை­மையில் கடந்த 15ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை, அளுத்­கம நகரில் கூட்­ட­மொன்று நடத்­தப்­பட்­டது. இதன் திட்­ட­மிட்ட விளை­வாக வன்­மு­றைகள் அந்­ந­கரில் வெடித்­தன. இன­மு­று­கலை ஏற்­ப­டுத்த நடத்­தப்­படும் இக்­கூட்­டத்தை தடை செய்­யு­மாறு முஸ்லிம் அர­சியல் வாதிகள், அமைப்­புகள், அப்­பாவி முஸ்லிம் மக்கள் பொலி­ஸா­ரிடம் மன்­றாட்­ட­மான கோரிக்கை விட்­டி­ருந்­துங்­கூட அக்­கோ­ரிக்கை நிரா­க­ரிக்­கப்­பட்­டது. கூட்­டத்தின் முடிவில் பல லொறி­களில் வந்து இறங்­கிய காடையர் கூட்­ட­மொன்று இணைந்த முறையில் இந்த இனக்­கொ­டூரம் கட்­ட­விழ்த்து விடப்­பட்­டி­ருக்­கி­றது. ஆயி­ரக்­க­ணக்­கான மக்கள் பயம், பீதி கார­ண­மாக பள்­ளி­வா­சல்­களில் தஞ்சம் கோரி­யி­ருந்­துள்­ளனர். ஊர்­வலம் நடத்­தப்­பட்டு லொறி­களில் கொண்டு வரப்­பட்ட காடையர் கும்­பலின் பலத்­துடன் துவம்ஷ விழா நடத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது. இது இலங்கை வர­லாற்றில்
 
முஸ்லிம் சமூ­கத்­துக்­கெ­தி­ராக கட்ட­விழ்த்து விடப்­பட்ட பாரிய கொடுமை, கொடூரம் என்­பதை எல்­லோரும் ஏற்­றுக்­கொண்­டுதான் ஆக வேண்டும்.2009 ஆம் ஆண்டு முள்­ளி­வாய்க்கால் யுத்­தத்தைத் தொடர்ந்து இலங்கை முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ராக கட்­ட­விழ்த்து விடப்­பட்டு வரும் வன்­மு­றை­களும் வன்­மங்­களும் ஏராளம் என்­பதை யாரும் நிரா­க­ரித்­து­விட முடி­யாது. அளுத்­கம நகரின் அட்­டூ­ழி­யங்­களை தொடர்ந்து சம நேரத்தில் இன்னும் பல சம்­ப­வங்­களும் குரோ­தங்­களும் நடந்­தே­றி­யுள்­ளன என்­ப­தற்கு பதி­வாக கடந்த ஜூன், 16 ஆம் திகதி, அதே பொது­ப­ல­சேனா அமைப்­பினால் பதுளை நகரில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக நடத்­தப்­பட்ட ஆர்ப்­பாட்டம் கார­ண­மாக அப்­ப­கு­தியில் பெரும் பதற்றம் நில­வி­யி­ருக்­கின்­றது. பதுளை சிறைச்­சா­லைக்கு முன் முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ராக ஊர்­வலம் நடத்­தப்­பட்­ட­துடன் வர்த்­தக நிறு­வ­னங்­களை மூடு­மாறும் ஆர்ப்­பாட்­டக்­காரர் பலாத்­காரம் செய்­துள்­ளனர். இதே­நேரம் தெஹி­வளை ஸ்டேசன் வீதி­யி­லுள்ள பிர­பல மருந்­த­க­மொன்று இரவு தாக்­கப்­பட்­ட­துடன் தீயிட்டு கொளுத்­தப்­பட்டும் உள்­ளது.
 
அண்­மைக்­கா­ல­மாக குறிப்­பாக முஸ்லிம் மக்­க­ளுக்­கெ­தி­ராக தூண்டி விடப்­படும் சம்­ப­வங்­களும் கெடு­தி­களும் அதி­க­ரித்துக் கொண்­டே­யி­ருக்­கின்­றன. மிக அண்­மையில் பட்­டிப்­பளை பிர­தேச செய­லாளர் காரி­யா­ல­யத்­துக்குள் புகுந்து பிர­தேச செய­லா­ளரை மங்­க­ளா­ரா­மய விகா­ரா­தி­பதி தாக்­க­மு­யன்ற சம்­பவம். இதேபோன்று இந்­துக்­க­ளுக்குச் சொந்­த­மான அகஸ்­தியர் ஸ்தாப­னத்தை மீள் அமைக்க விடாமல் ஒரு பிக்­குவின் அட்­ட­காசம் தொடக்கம் பல விட­யங்கள் மத­கு­ரு­மார்­க­ளா­லேயே முன்­னெ­டுத்துச் செல்­லப்­படும் கேவ­லங்கள் நாளுக்கு நாள் அதி­க­ரித்துக் கொண்­டே­யி­ருக்­கின்­றன. முஸ்லிம் மக்கள் வாழும் பிர­தே­சங்­களை உடைப்­பது, சுவீ­க­ரிப்­பது, பள்­ளி­வா­சல்கள், கடைகள், சொத்­துக்கள் என்ற வகையில் அழிப்­புக்கு உள்­ளாக்­கு­வது போன்ற இன்­னோ­ரன்ன கெடு­தி­களும் இனக்­கு­ரோத செயல்­களும் வளர்ந்து கொண்­டே­யி­ருக்­கின்­றன.
 
தம்­புள்ள பள்­ளி­வாசல் என்று அழைக்­கப்­படும் ஹைரியா ஜும்ஆப் பள்­ளி­வாசல் விகா­ரை­யொன்­றினை தலைமை மத­குரு ஒரு­வரால் (20 ஏப்ரல், 2012) தாக்­கப்­பட்­டது. குரு­நாகல் மாவட்­டத்­தி­லுள்ள உமர் இப்னு கத்தர் குர் ஆன் மத­ர­ஸாவில் தொழுகை நடத்­து­வதை நிறுத்­து­மாறு குரு­மார்கள் தலை­மையில் ஆர்ப்­பாட்டம், இதேபோன்று குரு­நாகல் மாவட்டம் தெதுரு ஓயா­கம தாருல் அக்ரம் தக்­கி­யாவில் இரவு நேரத் தொழு­கையை நிறுத்­து­மாறு பௌத்த மத­கு­ரு­மார்­களின் தலை­மையில் ஆர்ப்­பாட்டம் செய்­யப்­பட்­ட­தோடு தொழுகை நடத்­து­வது நிறுத்­தப்­பட்­டமை, இதே போன்றே தெஹி­வளை பீரிஸ் மாவத்­தை­யி­லுள்ள தாருல் அக்ரம் குர் ஆன் மத்­ர­ஸாவில் தொழுகை நடத்­து­வதை உத்­தி­யோ­க­பூர்­வ­மாக நிறுத்­தி­யமை போன்ற இன்­னோ­ரன்ன சம்­ப­வங்கள் நடந்த வண்­ணமே இருந்­தி­ருக்­கி­றது.
 
இதுமாத்­தி­ர­மன்றி, புத்தர் சிலை அமைப்பு, ஹலால் போராட்டம் என்ற எத்­த­னையோ வகை­யான இடைஞ்­சல்­களும் இடை­யீ­டு­களும் சிறு­பான்மை சமூ­க­மான முஸ்லிம் சமூ­கத்­துக்­கெ­தி­ராக நடத்­தப்­பட்­டன, நடத்­தப்­பட்டு வரு­கின்­றன. திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் உள்ள கரு­ம­லை­யூற்று என்னும் கிரா­மத்தில் அமைந்­தி­ருக்கும் கரு­ம­லை­யூற்று பள்­ளி­வாசல் 175 வருட கால பழைமை வாய்ந்த பள்­ளி­வா­ச­லாகும் (1837). இங்கு சுமார் 400 குடும்­பங்­க­ளுக்கு மேல் முஸ்லிம் மக்கள் வாழ்ந்து வரு­கின்­றார்கள். அங்கு வாழ்ந்து வரும் மக்கள் தொழுகை நடத்த முடி­யாத நிலை­யொன்று கொண்ட பள்­ளி­வா­ச­லாக அது காணப்­ப­டு­கி­றது. இதே­போன்றே மூதூர் ஜபல் நகர் மலைப்­ப­கு­தியில் பௌத்த விகா­ரையோ, புத்­த­ர்சி­லையோ எக்­காலப் பகு­தி­யிலும் இருந்­த­தில்லை. ஆனால், அண்­மையில் நடந்ததென்ன? முஸ்லிம் மக்கள் சுற்­றி­வளைத்து வாழும் இம்­மலைப் பிர­தே­சத்தில் விகா­ரை­யொன்று அமைக்­கப்­பட்டு அது பௌத்த புனித தல­மாக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.
 
இரத்­தி­ன­புரி மாவட்­டத்­தி­ல் பலாங்­கொடை பிர­தே­சத்­தி­லுள்ள ஜெய்­லானி பள்­ளி­வா­ச­லுக்கு பௌத்த தீவி­ர­வா­திகள் எதிர்ப்புக் காட்­டி­யமை, மாத்­தறை கந்­தர பள்­ளி­வாசல் (09.02.2013) தாக்­கு­த­லுக்கு உள்­ளா­கி­யமை, காலி ஹிரும்­புரை முஹை­யதீன் ஜும் ஆப் பள்­ளி­வாசல் தாக்­கப்­பட்­டமை, கேகாலை முஹைதீன் ஜும்ஆப் பள்­ளி­வாசல் கல்­வீச்சு தாக்­கு­த­லுக்கு உள்­ளாக்­கப்­பட்­டமை போன்ற நூற்­றுக்­க­ணக்­கான சம்­ப­வங்கள் கடந்த இரண்டு, மூன்று வரு­டங்­க­ளுக்குள் நடந்து கொண்­டமை, முஸ்லிம் மக்­களை பயத்­துக்கும் பீதிக்கும் உள்­ளாக்­கப்­பட்ட சம்­ப­வங்­க­ளா­கவே கரு­தப்­ப­டு­கி­றது.
 
இது ஒரு­பு­ற­மி­ருக்க, முஸ்லிம் மக்­களின் கலா­சார இருப்­புக்கள் மீதும் பேரினச் சமூ­கத்தின் கை நீட்­டல்கள் அதி­க­மாகிக் கொண்­டன என்­ப­தற்கு அடை­யா­ள­மாக, ஹலால் என்ற மாயையை உரு­வாக்கி அதன்­மீது காட்­டப்­பட்ட எதிர்ப்­புகள், ஆர்ப்­பாட்­டங்கள் என்­பன குறித்து மக்கள் சமூ­கத்தை ஓடோட விரட்டும் சம்­ப­வங்­க­ளாக பார்க்­கப்­ப­டு­கின்­றன. ஹலால் எதிர்ப்­புக்­கான சுவ­ரொட்­டிகள் நாடு தழு­விய ரீதியில் எல்லா இடங்­க­ளிலும் ஒட்­டப்­பட்­டன.
 
குரு­நாகல் மாவட்­டத்தில் (11.02.2013), காலியில் முஸ்லிம் மக்­க­ளுக்­கெ­தி­ரான சுவ­ரொட்­டிகள், (14.02.2013) இதே மாதம் 21ஆம் திகதி கண்டி மாவட்­டத்தில் முஸ்லிம் மக்­க­ளுக்­கெ­தி­ரான சுவ­ரொட்­டிகள் என்­ப­வற்­றுடன் களுத்­துறை மாவட்டம் பேரு­வளை பிர­தேச சபைக்கு சொந்­த­மான தர்கா நகரில் மாடு அறுப்­ப­தற்கு (2.3.2013) எதிர்ப்புக் காட்­டப்­பட்­டமை, ஹலால் சான்­றிதழ் உட­ன­டி­யாக வாபஸ் பெறப்­பட வேண்­டு­மென ஷரீஆ சட்­டங்­க­ளுக்கு இந்­நாட்டில் இட­ம­ளிக்க முடி­யாது. இஸ்­லா­மிய வங்­கி­முறை, காதி நீதி­மன்றம் முத­லி­யவை தேவை­யற்­றவை என பொது­ப­ல­சே­னாவின் செய­லாளர் ஊட­கங்­க­ளுக்கு கருத்துத் தெரி­வித்­தி­ருந்­தமை, (27.02.2013) மாத்­தறை மாவட்­டத்தில் நுபே பகு­தியில் வகுப்­புக்குச் சென்று திரும்பிக் கொண்­டி­ருந்த மாண­விகள் தாக்­கு­த­லுக்கு உள்­ளா­னமை, கண்டி போதனா வைத்­தி­ய­சா­லை­யிலும் முஸ்லிம் பெண் தான் அணிந்­தி­ருந்த அபா­யா­வையும், ஹிஜா­பையும் அகற்­று­மாறு அங்கு கட­மை­யி­லி­ருந்த தாதி­யினால் நிர்ப்­பந்­திக்­கப்­பட்­டது (8.03.2013) போன்ற ஆயிரக்கணக்­கான சம்­ப­வங்கள் முஸ்லிம் சமூ­கத்தின் கலா­சாரம், பொரு­ளா­தாரம், சமூக விழு­மி­யங்கள் போன்ற எல்லாத் துறை­க­ளையும் நெருக்­கடி நிலைக்கு உள்­ளாக்கும் கொடு­மை­க­ளா­கவே காணப்­ப­டு­கி­றது.
 
இஸ்­லா­மிய சமூ­கத்தை பொறுத்­த­வரை இந்த நாட்டின் தேசிய அர­சி­ய­லு­டனும் பெரும்­பான்மை இனத்­து­டனும் ஒத்­துப்­போகும் சமூ­க­மா­கவே அவர்கள் இருந்து வந்­துள்­ளார்கள். அது­வு­மன்றி இந்த நாட்­டி­லுள்ள எல்லா பிர­தே­சங்­க­ளிலும் பரந்து வாழும் ஒரு சமூ­க­மா­கவும் அவர்கள் வாழ்ந்து வரு­வது இன்­னு­மொரு வகை பல­மா­கவும் இருக்­கின்ற நிலையில் அவர்கள் மீது அடிக்­கடி நடத்­தப்­படும் இந்த வகை இன வீச்­சுக்கள் அவர்­க­ளுக்கு மனக் கஷ்­டத்­தையும் விரக்­தி­யையும் வழங்­கு­கின்ற அசம்­பா­வி­தங்­க­ளா­கவே ஆகி­வி­டு­கின்­றன. இலங்கை வர­லாற்றில் என்­று­மில்­லா­த­வாறு உரங்­கொண்டு நிற்­கின்ற இன­வாத அமைப்­புக்­களும் கட்­சி­களும் தலை­வர்­களும் நல்­லி­ணக்கம், தேசிய ஒற்­றுமை, இன ­உ­றவு, மத சமத்­தன்மை ஆகிய அனைத்­துக்கும் குந்­தகம் விளை­விக்கும் கைங்­க­ரி­யங்­க­ளி­லேயே ஈடு­பட்­டுக்­கொண்­டி­ருப்­பதை இலங்கை அர­சாங்கம் கண்டும் காணா­மலும்தெரிந்தும் தெரி­யா­மலும் ஏன் நடந்து கொள்­கி­றது என்­பது புரி­யா­த­தொரு விட­ய­மா­கவே காணப்­படு­கி­றது.
 
பொது­ப­ல­சேனா, ஹெல­ உ­று­மய, ராவண பலய என்ற அமைப்­புக்­களின் அண்­மைக்­கால உரு­வாக்கம் இலங்கை அர­சி­ய­லுக்கு எல்லா வகை­யிலும் பாரிய சவா­லா­கவே அமைந்து காணப்­ப­டு­வதை யாரும் புரிந்து கொள்ளும் தன்­மையில் இல்­லை­யென்­பதே உண்மை. இதில் பொது­ப­ல­சேனா என்ற அமைப்பின் நடி­பங்கு அதி­க­மா­கவும், அதி தீவி­ர­மா­கவும் காணப்­ப­டு­கி­றது என்­பது அர­சாங்­கத்­துக்கு மட்­டு­மல்ல அகில உல­கத்­துக்கும் தெரிந்த ஒரு விட­ய­மாகும். 2013ஆம் ஆண்டு இந்த அமைப்பு மாவ­னல்­லை­யென்னும் முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பகு­தியில் முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான ஒன்­று­கூ­ட­லொன்றை நடத்­தி­யது (25.2.2013.) இதன்­போது முஸ்லிம் பெண்கள் அணியும் கறுப்­பு­நிற ஹிஜாப் ஆடையை தடை செய்­வது குறித்து இந்த அமைப்­பினர் ஆலோ­சனை நடத்­தினர். சவூ­தியின் அடிப்­படை வாதத்­தையும் தீவி­ர­வாதக் கொள்­கை­யையும் இலங்­கையில் முஸ்­லிம்கள் பரப்­பு­கின்­றனர் என்று குற்­றச்­சாட்­டு­களை முன்­வைத்­தனர். இலங்கை ஜம்­மி­யத்துல் உலமா சபையை புலிகள் இயக்­கத்­துடன் ஒப்­பிட்டுக் கருத்துத் தெரி­வித்­தி­ருந்­தார்கள். இப்­படி பார்க்­கு­மி­ட­மெங்கும் நீக்­க­மற என்று குறிப்­பி­டு­வ­து­போல முஸ்லிம் மக்­க­ளுக்­கெ­தி­ரான கெடு­பி­டி­களும், கொடு­மை­களும் தாக்­கு­தல்­களும் அழிப்­புக்­களும் அட்­டூ­ழி­யங்­களும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்­கின்­றன. இந்த நிலையில் முஸ்லிம் தலை­மைத்­து­வங்­களும், அதைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­கின்ற கட்­சி­களும் தங்கள் எதிர்­கால சமூக வர­லாற்றை எவ்­வாறு அழைத்துக் கொண்டு செல்­லப்­போ­கின்­றார்கள் என்பதிலேயே முஸ்லிம் அப்பாவி மக்களின் எதிர்காலம் தங்கியிருக்கிறது என்பது சொல்லாமலே புரியப்பட வேண்டிய விடயமாகும்.
 
உலக நாடு­களைப் பொறுத்த வரை சில நாடு­களில் ஐம்­ப­துக்கு மேற்­பட்ட தேசிய இனங்கள் வாழு­கின்ற நாடு­கள்­கூட இருக்­கின்­றன. அந்த நாடு­க­ளி­லெல்லாம் அந்த தேசிய இனங்­களின் பொரு­ளா­தாரம், வாழ்க்கை முறைகள், பண்­பா­டுகள், மதப் பாரம்­ப­ரி­யங்கள், மொழிகள் என்­பன மதிக்­கப்­ப­டு­வதும் சமத்­தன்­மை­யோடு பேணப்­ப­டு­வதும் ஒரு உயர்ந்த அர­சியல் தத்­து­வ­மாக இருக்­கின்­ற­போது ஆகக்­கூடிய மூன்று தேசிய இனங்கள் வாழு­கின்ற இந்த சின்­னஞ்­சி­றிய நாட்டில் ஒரு மதத்­தி­ன­ருக்கு இன்னொரு மதத்தினரோடு உடன்பாடில்லை.
 
ஒரு மொழியைப் பேசு­கின்­ற­வர்கள் இன்­னு­மொரு மொழி பேசு­கின்­ற­வர்­களை விரும்­பு­வ­தில்­லை­யென்ற நாக­ரீக­மற்ற அர­சியல் போக்­கு­களும் மத அனுட்­டா­னங்­களும் சமூக குறி­காட்­டி­களும் நிறைந்த ஒரு நாடா­கவே இலங்­கை­யென்னும் தீவு சுதந்­தி­ரத்­துக்குப் பின் ஆக்­கப்­பட்­டி­ருக்­கி­றது என்­பது கவலை தரு­கின்ற விட­யந்தான்.இத்­த­கைய கெடு­தி­க­ளுக்கும் ஊறு விளை­விப்­புக்கும் கார­ண­மா­ன­வர்கள் யார் என்­பது கண்­டு­பி­டிக்­கப்­பட வேண்டும். வெறும் அர­சியல் பீடத்தில் ஏறி இருந்து கொண்டு இந்த நாட்டை மத­வாத, இன­வாத நாடாக்க முனையும் ஒவ்­வொ­ரு­வரும் அதற்­கான பலனை அனு­ப­விக்க வேண்­டிய காலத்தை அழைப்­பதை விடுத்து சமத்­து­வ­மான, சமா­தா­ன­மான, இணக்­க­பூர்­வ­மான ஒரு நாட்டைக் கட்டியெழுப்ப முனையாதவரை எதையுமே வென்றெடுக்க முடியாது.

No comments:

Post a Comment