கற்றுக் கொண்ட பாடங்கள், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஐ.தே.க.வின் நிலைப்பாடு
(1)இலங்கையைப் பாதிப்பிற்கு உள்ளாக்கிய போரைத் திரும்பிப் பார்ப்பதற்கும் நாட்டில் மீண்டும் சீர்நிலையையும் சமாதானத்தையும் கட்டியெழுப்பும் யுகம் ஒன்றை எதிர்நோக்குவதற்குமென' நியமிக்கப்பட்ட கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழு இடைக்கால அறிக்கையொன்றைச் சமர்ப்பித்து அதனைத் தொடர்ந்து அதன் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. ஆணைக்குழுவின் பணிப்பாணையின் பிரதான பாகமாகிய இன்றியமையாத விடயங்களில் திட்டவட்டமானதும் உண்மையானதுமான ஆய்வின் முடிவுகள் எவையும் இல்லாதிருப்பதனை நாம் ஆரம்பத்திலேயே பதிவு செய்ய விரும்புகின்றோம்.
2. போர் நிறுத்த உடன்படிக்கை கருத்துருவில் தவறானது என்ற ஆணைக்குழுவின் முடிவு ஏற்கத்தக்கதல்ல. போர் நிறுத்த உடன்படிக்கையின் பின்னணியை அல்லது அதன் செயற்பாடுகளைப் பற்றி நன்றாக அல்லது எதுவுமே அறிந்திராத ஜாவிட் யூசுப் என்பவரிலும் பேச்சுவார்த்தைகளுக்கும் இணக்கப் பேச்சு வார்த்தையின் அடிப்படையிலான தீர்வுக்கும் முற்றாக எதிர்ப்பு தெரிவித்த யாழ். பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பிலும் தங்கியிருப்பதில் குறைபாடுகள் உண்டு. போர் நிறுத்த உடன்படிக்கையின் தோல்வி தொடர்பாக ஆணைக்குழுவால் எடுக்கப்பட்ட முடிவு 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையில் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வின் தாக்கத்தையும் இந்தத் தேர்தலின் பின்னர் நேரடிப் பேச்சு வார்த்தை நடத்தாமை சம்பந்தமாகவும் கருத்தில் கொள்ளவில்லை. டோக்கியோ பிரகடனம் உட்பட 2005 இல் ஐ. தே. க. வினால் சமர்ப்பிக்கப்பட்ட சமாதான செயல்முறைத் தொகுப்பு நிராகரிக்கப்பட்டமை ஆணைக்குழுவால் அதன் அறிக்கையில் விட்டு விடப்பட்டுள்ளது. மேலும் சமாதான செயன்முறையின் பின்னர் தீர்வொன்றைக் காண்பதற்கும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கும் சர்வதேசத்தின் கடப்பாட்டை ஆணைக்குழு கருத்திற் கொள்ளத் தவறிவிட்டது. போர் நிறுத்த உடன்படிக்கை இலங்கையின் பொருளாதாரத்தின் மீது கொண்டிருந்த சாதகமான விளைவுகளையும் ஆணைக்குழு கருத்திற் கொள்ளவில்லை. 2001 இல் 1 வீதமாகவிருந்த எதிர்மறையான மொத்த உள்ளூர் உற்பத்தி ஓராண்டிற்குள் 2002 இல் 4 வீதமாக வளர்ந்தது. போர் நிறுத்த உடன்படிக்கையின் சமூக பொருளாதார நன்மைகள் தொடர்பாகவும் ஆணைக்குழு மௌனம் சாதிக்கின்றது.
3.வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இரண்டுமே போர்க்களத்தால் சூழப்பட்டிருந்தன. இலங்கை அரசாங்கத்தினதும் புலிகளினதும் தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைகளால் பெருந்தொகையான மக்கள் பாதிக்கப்பட்டனர். வடக்கிலும் கிழக்கிலும் உடனிணைந்த சேதங்களுள் பல இலட்சக்கணக்கான பொதுமக்கள் புலம் பெயர்வும் அவர்களது வாழ்வாதாரங்களினதும் வாழ்க்கை நிலைமைகளினதும் பாதிப்பும் அடங்கும். தெற்கில் பல பகுதிகளிலும் ஆழமாக வடுக்களை ஏற்படுத்திய இந்தப் போர் நாட்டின் எந்தவொரு பாகத்தையும் விட்டு வைக்கவில்லை. இறப்புகளின் எண்ணிக்கையும் காயப்பட்டு ஆதரவை நாடி நிற்கும் மக்களின் எண்ணிக்கையும் இன்னமும் சரியாக கணிப்பிடப்படவில்லை. முகாம்களில் முடங்கிக் கிடப்பவர்களினதும் போர் இடம்பெறாத வலயங்களில் சிக்க வைக்கப்பட்டவர்களினதும் எண்ணிக்கையையும் அரசாங்கம் சரியாக கணிப்பிடத் தவறியமைக்கான காரணங்கள் என்ன என்பதையிட்டும் ஆணைக்குழு போதியளவில் விசாரித்தறியத் தவறிவிட்டது. போரின் கடைசி வாரத்தில் போர் நடைபெறாத வலயத்திலிருந்து தப்பியோடிய குடிமக்களைக் குடியமர்த்துவதற்கு போதியளவு ஆயுதங்கள் மேற்கொள்ளப்படவில்லை என்பதும் அவதானிக்கப்பட்டது. அத்தகைய விளைவொன்றுக்கு அரசாங்கத்தின் தயார் நிலையும் ஆணைக்குழு பரிசீலனை செய்யத் தவறிவிட்டது.
4.போர் இந்தப் பிரதேசங்களில் வதியும் மூன்று பிரதான சமூகத்தினரையும் பாதித்தது என்பதை அரசாங்கம் மிகவும் சரியாகவே ஒப்புக்கொண்டுள்ளது. மிக அவசரமான பிரச்சினைகளுள் ஒன்று புலம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றமும் அதனோடு தொடர்புடைய காணிச் சொத்துரிமை சார்ந்த பிரச்சினைகளுமாகும். ஆணைக்குழு இந்தப் பிரச்சினைக்கு முனைப்பாக கருத்தைச் செலுத்தவில்லை. இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு நன்கு பயிற்றப்பட்ட நிர்வாக அலுவலர்களில் தங்கியிருப்பதாகத் தோன்றுகின்றது. நிலையான தீர்வொன்றைக் காணவேண்டுமாயின் விரிவான சட்டவாக்கம் தேவை. அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஸ்தானிகராலும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவாலும் நியமிக்கப்பட்ட மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம், இலங்கையின் உள்நாட்டில் புலம்பெயர்ந்த ஆட்களையும் அகதிகளையும் பாதிக்கும் ஆதனம் தொடர்பாக பிரச்சினைகளைப் பற்றிய சட்டப் பகுப்பாய்வு, என்னும் தலைப்பிலான அதன் அறிக்கையில் இந்தப் பிரச்சினைகளுக்கு கவனம் செலுத்தியுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றம் மே. நீ. விண்ணப்பம் 620/ 2011 இல் காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சினால் வழங்கப்பட்ட"பிம் சவிய' என்னும் காணி உரித்துப் பதிவு பற்றிய நிகழ்ச்சித் திட்டத்தின் அடிப்படையில் வழக்கை தடைசெய்யும் நிறுத்தற் கட்டளையையும் வழங்கியுள்ளது.
5. இலட்சக்கணக்கான மக்கள் தங்கள் இல்லங்களிலிருந்து புலம் பெயர்ந்தமை பெருந்தொகையான குடிமக்களின் இறப்புகள், தனியார் ஆதனங்களின் அழிவு கிராமிய சமுதாயங்கள் ஒட்டு மொத்தமாக காணாமற் போனமை என்பன ஒரு தேசிய பேரதிர்ச்சியாகும். இது மிகவும் நீண்டகாலத்திற்கு எம்மத்தியில் நடமாடிக் கொண்டிருக்கும். அத்துடன் வரவிருக்கும் பல தலைமுறைகளுக்கு எம்மனதில் விசேடமாக தமிழ் மக்களின் மனதில் வேரூன்றியிருக்கும்.
6. ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை கவனத்திற் கொள்ளப்படாமையும் நாம் அவதானிக்கிறோம். ஐ.நா. வின் அறிக்கை வெளிப்பட்டமையின் விளைவாக ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் பொறுப்புகூறும் தன்மை மற்றும் மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளையே கையாளும் என்ற நிலைப்பாட்டையே அரசாங்கம் கொண்டிருந்தது. ஆணைக்குழுவின் அறிக்கையின் தவறுகை ஐ. நா. அறிக்கையின் பெரும் பாகத்திற்கு மறுமொழி அளிக்கப்படாதிருப்பதே.
7. 10, 000 குடிமக்களின் இறப்புகள், ஒரு அத்தியாவசியமான பலி என்ற நவின் திசாநாயகவின் கூற்று மேலும் புலனாய்வு செய்யப்படுதல் வேண்டும். எனவே யுத்தத்தின் கடைசிக் கட்டத்தின் மீதும் பதில் சொல்லும் பொறுப்பு பற்றிய பிரச்சினையின் மீதும் முடிவொன்றுக்கு வருவதற்கு முன்பு கிடைக்கக்கூடிய சான்றையிட்டு மேலும் ஆழமாக அவதானித்திருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அமைச்சர் ஆணைக்குழுவின் முன்னிலைக்குக் கூட அழைக்கப்படவில்லை. துரதிர்ஷ்டவசமாக அத்தகைய வெளிப்பாடொன்றின் விளைவாக இடம்பெற்றிருக்கக் கூடிய அழிவையும் சேதத்தையும் மட்டுப்படுத்துவதற்கு நியாயமான முயற்சி மேற்கொள்ளப்பட்டதா என்ற கேள்விக்கு ஆணைக்குழுவின் முடிவுகள் பதிலளிக்கவில்லை.
8.சனல் 4 வீடியோ சர்வதேச மனித உரிமைகள் மீதான முகவராண்மைகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சனல் 4 வீடியோ ஒளிப்பரப்பிற்கு ஆணைக்குழு தனது கருத்தைச் செலுத்தியுள்ளதுடன் வீடியோ காட்சியிலிருந்து எழுகின்ற சார்ந்துரைகள் உண்மையானவையா? பொய்யானவையா? என்பதை நிலைநாட்டுவதற்கு இவ்விடயங்கள் தொடர்பில் சுயேச்சையாக புலனாய்வை அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டும் என சரியாகவே விதப்புரை செய்தது. சுயேச்சையான விசாரணைக்கான செயல்முறை அமைப்பு பாரமட்சமற்ற விசாரணையொன்றை நடத்தக்கூடிய ஆற்றல் கொண்டதாக உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். அரசாங்கம் மனித உரிமைகள் பதிவில் முன்நோக்கிச் செல்லக் கூடியதாக இந்த விடயத்தை முடிவுறுத்துவதற்கு மிகவும் அவசரத் தேவையுள்ளது.
9.தடுத்து வைக்கப்பட்டவர்கள் தொடர்பிலான விடயங்களையிட்டு விசாரணைகளின் முடிவொன்றை நாம் பலமாக விதந்துரைக்கிறோம்.
10.இயைபான அதிகாரிகளுக்கு நம்பத்தகுந்த தகவலுடன் அறிக்கையிடப்பட்ட குடிமக்களின் இறப்புகளையும் காணாமற் போதலையும் பற்றி புலனாய்வு செய்வதற்கு அர்த்தமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுதல் வேண்டும். ஆதலால் அறிக்கையின் 9 ஆம் அத்தியாயத்தின் 9.37 (அ), 9.41, 9.50 ஆகிய பந்திகளில் குறிப்பீடு செய்யப்பட்ட அத்தகைய விடயங்களையிட்டு மேலும் புலனாய்வுகளை மேற்கொள்வதற்கு எல். எல். ஆர். சீ. யால் விதப்புரை செய்யப்பட்ட பல்வேறு சுயேச்சையான குழுக்களை அரசாங்கம் மேலும் நியமித்தல் வேண்டும்.
11. புலம்பெயர்ந்த அனைத்து மக்களும் தங்கள் இல்லங்களுக்கு திரும்பிச் சென்று தங்கள் வாழ்க்கையை மீண்டும் ஆரம்பிக்கவே இயல்பாகவே ஆர்வம் கொண்டுள்ளனர். அவர்கள் எந்த வாழ்க்கைத் தொழிலில் அனுபவமும் தேர்ச்சியும் கொண்டுள்ளனரோ அந்த வாழ்க்கைத் தொழிலில் அவர்கள் ஈடுபடுவதனை இயலச் செய்வதற்கு அவசியமான அனைத்து வசதிகளையும் அரசாங்கம் அளிக்க வேண்டும். வடக்கிலும் கிழக்கிலும் அபிவிருத்திச் செயற்பாடுகள் குறிப்பிடத்தக்க முறையில் இடம்பெறுவதையும் அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும். இந்நோக்கத்திற்கு அவசியமான நிதி வளங்களையும் அரசாங்கம் கிடைக்கச் செய்தல் வேண்டும்.
12.சனநாயக கோட்பாடுகளின் சிதைவு சட்டத்தை வலுவுக்கிடுவதில் அரசியல் தலையீடு பகிரங்கத்துறையை அரசியல் மயமாக்குதல் நல்லாட்சி காணப்படாமை சுயேச்சையான ஆணைக் குழுக்கள் இல்லாமை என்பன அறிக்கையில் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. தங்கள் குறைகளையிட்டு கவனம் செலுத்துவதற்கு அரசாங்கத்தின் ஆற்றலிலும் விருப்பத்திலும் ஓரங்கட்டப்பட்ட குழுக்கள் நம்பிக்கை இழப்பதற்கும் இது பொறுப்புடையதாகும். சனநாயக நிறுவனங்களை அச்சுறுத்தும் பிரச்சினைகளையும் சனநாயகக் கோட்பாடுகளையும் நல்லாட்சியையும் மனித உரிமைகளையும் மேம்படுத்த வேண்டிய தேவைப்பாட்டையும் ஒப்புக் கொண்டமைக்கு ஆணைக்குழுவைப் பாராட்டாது விட்டால் ஐ. தே. க. அதன் கடமையில் தவறியதாக அமையும்.
13. நல்லிணக்கம் (பந்திகள் 9.167 9.285) மற்றும் குறிப்பாக மனித உரிமைகள் தொடர்பாக அவதானிப்புகளையும் விதப்புரைகளையும் வரவேற்கும் அதே வேளை இனத்துவ மத அல்லது அரசியல் பாகுபாடுகள் கொண்ட பிரிவுகள் இல்லாது முழுமையாக செயற்படும் சனநாயகமே இந்தக் காலக்கட்டத்தின் தேவையாகும் என்பதை ஐ.தே.க. வலியுறுத்த விரும்புகின்றது. ஐ. தே. க. பின்வருவனவற்றை முன்மொழிகிறது.ஐ.அவசரகால ஒழுங்கு விதிகளின் கீழ் மக்களை கைது செய்தல் பொலிஸ் கட்டுப்பாட்டுக்குள் எடுத்தல் உட்பட ஆட்கடத்தல்கள் தன்னார்வமின்றி காணாமற் போதல் என்பன பற்றி புதிய சட்டவாக்க ஏற்பாடுகள்.சாட்சிகளின் பாதுகாப்பிற்கு பயனுறுதியுள்ள நிகழ்ச்சித்திட்டமொன்றின் அவசியம்.அண்மைக்காலத்திலும் இன்றும் கூட பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்களையிட்டுப் புலனாய்வு செய்வதற்கு பாராளுமன்ற தெரிவுக் குழுவொன்று 2003 இல் அமைச்சரவையா.ல் ஏற்றுக்கொள்ளப்பட்ட தகவல் சுதந்திரம் மீதான அறிக்கையை சட்டவாக்கம் செய்தல்.நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிறைவேற்றுவதற்கும் வடக்கிலும் கிழக்கிலும் ஆயுதம் தாங்கிய குழுக்கள் அனைத்தையும் ஆயுதங்களைக் களையச் செய்வதற்கும் சட்டம் வலுவுக்கிடுதல் பற்றி அறிக்கையிடுவதற்கும் அரசாங்கத்தாலும் எதிர்க்கட்சியாலும் பெயர் குறித்து நியமிக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட மேற்பார்வைக் குழுவொன்றின் நியமனம்.
2011 இல் ஐ.தே.க. வால் செய்யப்பட்டதுபோன்று பொலிஸ் பிரிவுக்குப் புறம்பாக அமைச்சொன்று உடனடியாக தாபிக்கப்படல், தமிழ் பேசும் ஆளணியனரை பொலிஸ் படையில் சேர்ப்பதற்கும் தற்போதுள்ள ஆளணியினரை மும்மொழித் தேர்ச்சியுடையவர்களாக்குவதற்கும் திட்டவட்டமானதும் விரிவானதுமான நிகழ்ச்சித் திட்டம் ஒன்றை அரசாங்கம் அறிவித்தல் வேண்டும்.வடக்கு பிரதேச இராணுவமயமாக்கப்படுவதை நிறுத்துதல் அத்துடன் வடக்கில் சிவில் நிர்வாகப் பணியை பகிரங்க சேவைக்கு மட்டுப்படுத்துதல்நாட்டின் இறைமையையும் ஆள்புல ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கும் தேவையை தங்கள் மனதிற்கொண்டு இராணுவத்திற்குப் புதிய பணியை நிர்ணயித்தல்.
ஆள்புல ஒருமைப்பாட்டின் பாதுகாப்பில் இராணுவத்தின் பணி ஒப்புக்கொள்ளப்படுகின்றது. ஆனால், உயர்மட்ட ஆளணியினருக்கு சன்மானம் வழங்குவது மாத்திரம் போதாது. சேவையாற்றும் எல்லா பதவி வரிசைகளையும் சேர்ந்தவர்களின் தேவைப்பாடுகளை நிறைவு செய்வதற்கு ஒரு நிகழ்ச்சித் திட்டம் இருத்தல் வேண்டும்.பொது மக்களின் குறைகளைக் கையாள்வதற்கு தாபிக்கப்படும் விசேட நிறுவனம் பாராளுமன்றத்தில் இரு தரப்பு உடன்படிக்கையை அடிப்படையாகக் கொண்டிருத்தல் வேண்டும். இது சுயேச்சையான ஒரு நிறுவனமாகவும் சுயேச்சையான பொலிஸ் ஆணைக்குழுவையும் சுயேச்சையான பகிரங்க சேவை ஆணைக்குழுவையும்போன்று அதே அந்தஸ்தையுடையதாகவும் இருத்தல் வேண்டும்.பயனுறுதியுள்ள நல்லிணக்கத்தினை எய்துவதற்கு நிச்சயமாக ஒரு தடையாக இருக்கும் அரசாங்கத்தின் அரசியல் செயல்முறைகளில் ஈடுபாடும் கொண்டவர்களான ஒரு காலத்தில் போராளிகளாக இருந்தவர்களையும் ஆயுதம் தாங்கிய அரசியல் குழுக்களையும் பயன்படுத்துவதில் காப்படைவு கொள்ளாமல் நல்லிணக்க நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்.
அரசியலமைப்பின் 16 ஆம் உறுப்புரையை நீக்கம் செய்து ஐஇஇககீ ஐ எமது சட்டத்தின் ஒரு பாகமாக சேர்ப்பதன் மூலம் அடிப்படை உரிமைகள் பற்றிய அத்தியாயம் வலுப்படுத்தப்படுதல் வேண்டும். பொது மக்கள் பாதுகாப்பு பற்றிய ஙீஙஐஐஐ ஆம் அத்தியாயம் உடனடியாக நெருக்கடிக்கான அதிவிசேட தத்துவங்களை மட்டுப்படுத்தி மீளாய்வு செய்யப்பட வேண்டும். பாதுகாப்பிற்காக தடுத்து வைத்தல் தொடர்பான தத்துவம் அத்தியாயம் இல் குறித்துரைக்கப்படுதல் வேண்டும். அவசரகால ஒழுங்குவிதிகளின் சட்டவாக்கத்தை மீளாய்வு செய்வதற்கு பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்று தாபிக்கப்படுதல் வேண்டும் சட்டவாக்கத்தை மீளாய்வு செய்தல், அரசாங்கத்திற்கும் மாகாண சபைகளுக்கும் உள்ளூர் அதிகார சபைகளுக்கும் இடையிலான பிணக்குகளைத் தீர்த்தல் என்பன உட்பட அரசியலமைப்பு தொடர்பான விடயங்களைக் கையாள்வதற்கு அரசியலமைப்பு நீதிமன்றமொன்றைத் தாபித்து அடிப்படை உரிமைகளை நிலைநாட்டல், தற்பொழுது வலுவிலுள்ள சட்டவாக்கத்திற்கு முன்னர் மீளாய்வு செய்யும் முறைமை முற்றிலும் அவசியம் எனக் காணப்பட்டது. சட்டவாக்கத்தின் பின்னர் மீளாய்வு செய்யும் நடைமுறையொன்றை நாம் பலமாக விதந்துரைக்கின்றோம்.
பின்வரும் முகவராண்மைகளின் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்கு புதிய செயன்முறை அமைப்பொன்றை நிறுவும் அரசியலமைப்புத் திருத்தமொன்று;
(அ )அரசியலமைப்பு நீதிமன்றம்
(ஆ )தேர்தல் ஆணைக்குழு
(இ )பொலிஸ் ஆணைக்குழு
(ஈ) பகிரங்க சேவை ஆணைக்குழு
(உ )உயர்நீதிமன்றம்
(ஊ) மேன்முறையீட்டு நீதிமன்றம்
(எ) மேல் நீதிமன்றங்கள்
(ஏ) பந்தி 9.218 இல் குறிப்பீடு செய்யப்பட்ட விசேட நிறுவனங்கள்
(ஐ )பொலிஸ் பரிசோதகர் தலைமையதிபதி
(ஒ) மனித உரிமைகள் ஆணைக்குழு
(ஓ )பணச் சபை
(ஒள) சட்டத்துறை தலைமையதிபதி
நீதிச்சேவை ஆணைக்குழு பிரதம நீதியரசரையும் மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவரையும் உயர் நீதிமன்றத்தின் சிரேஷ்ட நீதிபதியையும் கொண்டிருத்தல் வேண்டும். இத்திருத்தம் அரசியலமைப்பிற்கான 18 ஆவது திருத்தத்தின் இயைபான உறுப்புரைகளையும் நீக்கம் செய்யும்.
ஆணைக்குழுவால் அக்கறை கொள்ளப்பட்டவாறு அதிகாரப் பகிர்வு இனக் குழுக்களிடையே தீர்வொன்றைக் காண்பதற்குப் பிரதான காரணியொன்றாகும். அரசாங்கம் முதல் சந்தர்ப்பத்திலேயே தற்போதுள்ள அரசியலமைப்பு சார்ந்த ஏற்பாடுகளையும் ஏற்கனவே இடம்பெற்றுவரும் பந்தி 8.224 என்பதிலுள்ள விதப்புரைகளையும் அடிப்படையாகக் கொண்ட உரையாடல்களுக்கான பிரேரணைகளை முன்வைப்பதற்கும் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.விதப்புரைகளைத் தெளிவாகக் குறிப்பிடப்பட்ட கால வரையறையுடன் விரிவான திட்டமொன்றை அறிவிப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். ஆணைக்குழுவின் இடைக்கால விதப்புரைகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்தத் தவறியுள்ளதையும் ஐ.தே.க. அவதானிக்கின்றது. பாராளுமன்றத்தில் தமது அவதானிப்புரைகளைச் சமர்ப்பித்துள்ள எதிர்க்கட்சிகளால் உடன்பட்டுக்கொள்ளப்பட்ட எல்லா விதப்புரைகள் மீதும் உடனடி நடவடிக்கை எடுப்பதன் மூலம் அரசாங்கம் எல்லா நல்லெண்ணத்தையும் நிலைநாட்டுதல் வேண்டும். இத்திட்டம் 2009 ஆம் ஆண்டில் ஸ்பெயின் துறைமுகத்தில் அரசாங்கத் தலைவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சமநலவாய விழுமியங்களினதும் கோட்பாடுகளினதும் உறுதிப்பாட்டிற்கு எமது கடப்பாட்டை இறுதியாக நனவாக்க வேண்டும். (இணைப்பைப் பார்க்கவும்) பொதுநலவாயத்தின் ஓர் அங்கமாகிய இலங்கை இந்த உறுதிப்பாட்டிற்கு உரிமையுடைய நாடாகும்