Saturday, October 26, 2013


சமஷ்டி ஆட்சி முறை என்பது சாத்தியமாகிற்று. இந்தியாவில் 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் வழங்க பிரித்தானியா முன்வந்த பொழுதும் கூட முஸ்லிம்களால் ஐக்கிய இந்தியா என்ற கொள்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இலங்கையில் மிக நீண்ட காலமாக ஒரு நிரந்தர தீர்வினை எட்டக்கூடிய வகையில் ஒரு காத்திரமான முடிவு ஏற்படுத்தப்படவில்லை. கடந்த காலங்களில் சர்வதேச ரீதியில் இனப்பிரச்சினை பற்றிய தீர்வுக்கான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. ஐரோப்பிய நாடுகள் எவ்வாறான தீர்மானங்களை தம்முள் கூடி எடுத்துக் கொண்டாலும் அவை இன்றுவரையிலும் தமிழர்களுக்கு திருப்தியளிக்கும் முகமாக அமையவில்லை என்பது உலகறிந்த வெளிப்படையான உண்மையாகும். ஐ.நா. சபை தொடக்கம் ஐரோப்பிய ஒன்றியம் முதலாக ஆசிய பிராந்திய நாடுகள் வரைக்கும் இனப்பிரச்சினை தொடர்பாக அவரவர் சபைகளில் உரத்த தொனியில் குரல் எழுப்புகின்றதுடன் அவ்வப்போது ஏகமனதாக தீர்மானங்களையும்  நிறைவேற்றிய படியே இருக்கின்றனர். இவ்வாறான நாடுகளுக்கு மத்தியில் இந்தியா மத்திய மற்றும் மாநில மன்றத் தேர்தல்களில் இலங்கையின் பிரச்சினையினை ஒரு தாரக மந்திரமாக பயன்படுத்துவதும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. இவ்வாறானதொரு சூழ்நிலையில் இலங்கையின் உள்நாட்டு அரசியல் பிரமுகர்களினாலும் சர்வதேச அரசியல் ஆய்வாளர்களினாலும் சமஷ்டியினை நடைமுறைப்படுத்துவது பற்றிய ஒரு எண்ணக்கரு முன்வைக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இந்த சமஷ்டி ஆட்சி பற்றிய பேச்சு இன்று புதிதாக தோற்றம் பெற்ற ஒன்று அல்ல. 1919 ஆம்  ஆண்டு உருவாக்கப்பட்ட தேசிய காங்கிரஸின் காலத்திலேயே இடம்பெற்றது எனலாம். 

அன்றைய சூழ்நிலையில் தமிழ் தரப்பினர் சமஷ்டி தொடர்பில் அவ்வளவாக ஈடுபாடு உடையவர்களாக விளங்காவிட்டாலும் சிங்களத் தலைமைகள் சமஷ்டி பற்றிய காரசாரமான வாதங்களை முன்வைத்து சமஷ்டியாட்சியினை ஆங்கிலேயர்களிடம் கோரியிருந்தனர். இவ்வாறு சிங்களவர்களுக்கு மத்தியில் சமஷ்டி பற்றிய பேச்சு முக்கியத்துவம் பெற காரணமாக அமைந்திருந்த விடயம் பற்றி சற்று ஆழமாக நோக்குமிடத்து அவர்கள் தம்முள் இரண்டு அணிகளாக  பிரிந்து இருந்ததுடன் அவர்களுக்குள் வெவ்வேறான அரசியல் கருத்துக்களையும் கொண்டிருந்தமையே ஆகும். இங்கு 1922 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கை தேசிய காங்கிரஸினை தமது அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்திருந்தவர்கள் கரை நாட்டு சிங்களவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதொன்றாகும். இவர்களால் கண்டிச் சிங்களவர்களின்  கருத்துக்களுடன் உடன்பட்டு செல்ல முடியாமையினால் கண்டிச் சிங்களவர்கள் காங்கிரஸில் இருந்து வெளியேறி கண்டி அசம்பிளி (ஓச்ணஞீதூ அண்ண்ஞுட்ஞடூதூ) ஒன்றினை அமைத்தனர்.  இச்சபையானது 1928 ஆம் ஆண்டு காலப்பகுதியில் டொனமூர் அரசியலமைப்பு ஆணைக்குழுவினருக்கு வழங்கிய  அறிக்கையொன்றில் சமஷ்டி கோரிக்கையினை முன்வைத்துஅதனை ஆதரிப்பதாக கூறினர். தொடர்ந்தும் தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாக சட்ட மன்றங்களில் பேசப்படும் பொழுதும் சமஷ்டி ஒன்றே அரசியல் பிரச்சினைகள் அனைத்தையும்  தீர்க்க சிறந்த வழிமுறை என்று அடிக்கடி எடுத்துக் காட்டப்பட்டது. இதனையே பொதுஜன ஐக்கிய முன்னணியின் ஸ்தாபகரும் மூத்த அரசியல் தலைவருமான கு.ஙி.கீ.ஈ.  பண்டாரநாயக்க அவர்களும் தமது உரையில் கூறியிருந்தார். அவர் மேடைப் பேச்சில் அவ்வாறு கூறினார் என்று எடுத்துக் கொள்வதா அல்லது உண்மையில் இதய சுத்தியுடன் கூறினாரா என்பது தமிழ் தலைவர்களுக்கு ஒரு குழப்பத்தையே உண்டாக்கியிருந்தது அன்றைய சூழலில் . ஏனெனில் இதே சமஷ்டி வாத கருத்தை கூறிய கு.ஙி.கீ.ஈ.  பண்டார நாயக்க அவர்கள்தான் 1956 ஆம் ஆண்டு பெரும்பான்மை சிங்கள மக்களின் ஆதரவை பெற்றுக் கொள்ளும் முகமாக தனிச் சிங்கள சட்டத்தை தான் ஆட்சிக்கு வந்ததும் அமுல்படுத்துவதாக உறுதியளித்தார். அதனை அவ்வாறே செய்தும் காட்டினார். 

இதனால் தான் தமிழர்களுக்கு அரசு வழங்குகின்ற  வாக்குறுதிகளில் நம்பிக்கையின்மை ஏற்பட ஆரம்பித்தது. தற்கால வாதங்களின் படி சமஷ்டியானது இலங்கையின் பூகோள அமைப்பிற்கு நடைமுறைச் சாத்தியமான தொன்றாக அமையுமா என்பது பற்றி ஆராய வேண்டியதொரு தேவை உள்ளது.  கோட்பாட்டு ரீதியில் சமஷ்டி என்பது பின்வருமாறு அமைகிறது. குறித்த ஒரு நாட்டினுடைய சகல அதிகாரங்களும்  மத்திய அரசுகள்,  மாநில அரசுகள் என்ற அடிப்படையில் இருவகையான அரசுகளிடம் பிரிக்கப்பட்டு மத்திய, மாநில அரசுகள் இரண்டுமே இறைமையினை பிரயோகிக்கக் கூடிய வகையில் இறைமையுடன் தொழிற்பட ஏற்பட உருவாக்கப்பட்ட வகையில் யாப்பு வரையப்பட வேண்டும் என்பதே விதியாகும். இவ்வாறான சமஷ்டி ஆட்சி முறையினை இலங்கையில் அமுல்படுத்த முன்னர் நாம் இலங்கையின் அமைவிடம் மற்றும் வாழ்கின்ற மக்கள் தொகை,  காணப்படுகின்ற சமய , சமூக,  கலாசார விழுமியங்கள்,   பல்வேறு வகையான மொழியினை பேசுபவர்களது வீதம் என்பவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும். மேற்கூறப்பட்ட அம்சங்கள்  எண்ணிறைந்து காணப்படுமிடத்தும் நிலப்பரப்பு அதிகமாக காணப்படுமிடத்தும் உள்நாட்டில் ஏராளமான குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகரித்தே காணப்படுகிறது. இலங்கையினை பொறுத்தவரை பூகோள அமைப்பிலும் சரி பல்லினத் தன்மையிலும் சரி அளவுக்கு அதிகமாக எதுவுமே கிடையாது. நிலப்பரப்பு எனும்போது மக்கள் தொகைக்கு ஏற்றாற் போல் உண்டு. மொழி என்ற அடிப்படையில் நோக்குமிடத்து இரு பிரதான மொழிகள் காணப்படுகின்றன. ஆகவேதான் இந்தியாவைப் போன்று சமஷ்டி ஆட்சி முறை தேவையில்லை என்றும் அவ்வாறு ஏற்படுமாயின் வீணான நிர்வாக செலவுகளையும் காலதாமதத்தையுமே ஏற்படுத்தும் என்று சிலர் வாதிட்டு வருகின்றனர். இவர்களது வாதம் எவ்வளவு தூரம் சாத்தியமானது என்பதும் பலரது வினாவாக உள்ளது. 

ஏனெனில் இந்தியாவில் சமஷ்டி ஆட்சி சாத்தியமாகும் பொழுது ஏன் இலங்கையில் சாத்தியமாக முடியாது என்கின்றனர். இந்திய சமஷ்டியுடன் ஒப்பிட்டு இலங்கையின் இனப்பிரச்சினைக்கு சமஷ்டியை நோக்கி  முயற்சி செய்வது என்பது இலங்கையின் பூகோள அமைப்பினையும் குடித்தொகையினையும் (Kandy Assembly) கவனத்திற் கொள்ளாமல் இருக்கின்றோம் எனலாம். இந்தியாவின் புவியியல் அமைவானது இலங்கையின் அமைவிடத்திலிருந்தும் அதிகம் வேறுபட்டது. இந்தியா பெரும் நிலப்பரப்பினை கொண்டிருப்பதுடன் இலங்கை போன்று இரு பிரதான மொழிகளை பேசுபவர்கள் கிடையாது. அங்கு ஏராளமான மொழிகள் பாவனையில் உண்டு.அவரவர் சமூக கட்டமைப்புக்கு ஏற்ப பண்பாட்டு அம்சங்கள் மாறுபட்டு காணப்படுகின்றன. ஆகவே தான் அங்கு இன்று வரையிலும் 28 இற்கும் மேற்பட்ட மாநிலங்கள் காணப்படுகின்றன. இதிலிருந்து அங்கு நிலவளம் அதிகம் என்பதுடன் சனத்தொகையும் அதிகம். அத்துடன் பல்லின கலாசாரம் மேலோங்கி காணப்படுவதால் சமஷ்டி ஆட்சி முறை என்பது சாத்தியமாகிற்று. இந்தியாவில் 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் வழங்க பிரித்தானியா முன்வந்த பொழுதும் கூட முஸ்லிம்களால் ஐக்கிய இந்தியா என்ற கொள்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இதனால் முஸ்லிம் லீக் தலைவரான முகம்மது அலி ஜின்னா தனியான பாகிஸ்தான் என்றார். சுதந்திரம் என்பது எமக்கு கிடைக்கும் பொழுது இருவேறு அரசுகளாக மலர வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தார். அன்று இந்தியா முழுவதும் வாழ்ந்த முஸ்லிம்கள் உட்பட பாகிஸ்தானில் உள்ளவர்கள் மொத்தமாக 10 கோடி இஸ்லாமியர்கள் காணப்பட்டனர். 

தீர்மானம் சாதகமாக அமைந்து போனது. இந்தியா தனியாக தேசமாக தனக்கென சமஷ்டி அரசியலமைப்பை உருவாக்கியது.  இலங்கையின் நடைமுறை அரசியலமைப்பு ஏற்பாடுகளின் படி நோக்குமிடத்து சமஷ்டியாட்சிக்கு இடமில்லை என்பதும் தெளிவாக புலப்படுகிறது. ஏனெனில் 1978 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட  அரசியலமைப்பு இலங்கையினை ஏக இறைமையுடைய ஒரு நாடாக பிரகடனப்படுத்தியுள்ளதுடன் ஓரங்கமுடைய பாராளுமன்றத்திற்கு பிரதான சட்டவாக்க தத்துவங்களை ஒப்படைத்துள்ளமையும் இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசு என்ற வாசகத்துடன் ஒற்றையாட்சி அரசியலமைப்பினையும் கொண்டமைந்திருக்கின்றமையும் ஆகும். இங்கு மாகாண மற்றும் உள்ளூராட்சி பிரதேச  சபைகளுக்கு அனுமதியளிக்கப்பட்டிருக்கும் அதேவேளை அவை அனைத்தும் மத்திய அரசாங்க யாப்பு விதிகளுக்கமைய அரசால் வரையறை செய்யப்படுகிறது. அந்த வகையில் யாப்பு ரீதியாக நோக்குமிடத்தும் சமஷ்டியினை நடைமுறைப்படுத்துவது சிக்கலானதொரு விடயமாகவே உள்ளது. இவ்வாறான அரசியலமைப்பு ஏற்பாடுகள் பிறிதொரு வகையில் சமஷ்டி என்பதை நடைமுறைச் சாத்தியமற்றதாக்குகிறது. நடைமுறையில் இருக்கின்ற ஒற்றையாட்சி அரசியலமைப்பினை மாற்றியமைக்கக் கூடியதொரு சூழ்நிலையினை நோக்கும் பொழுதும் அதுவும் அவ்வளவு இலகுவாக மேற்கொள்ளக் கூடிய தொன்றல்ல. ஏனென்றால் நாட்டின் அரசியலமைப்பு எழுதப்படும்போதே இலகுவில் நெகிழ்ச்சியடைக் கூடியதாக எழுதப்படவில்லை. இதனால் அரசியலமைப்பினை மாற்றியமைக்க வேண்டுமாயின்  அதற்குரிய விஷேட பெரும்பான்மை ஆதரவினை பாராளுமன்றத்தில் பெறவேண்டும் அதாவது பாராளுமன்றத்தில் இருக்கின்ற பிரதிநிதிகளின் மூன்றில் இரண்டு அதிக பெரும்பான்மை தேவை. இந்த பெரும்பான்மை ஆதரவினை இன்று ஆட்சியிலிருக்கும்  அரசாங்கத்தினால் பெற்று நிறைவேற்ற முடியும்.

 ஆயினும்  சமஷ்டி அரசியலமைப்பு ஒன்றினை உருவாக்குவதில் பல சிக்கல்கள் இருப்பதனால் அதுபற்றி அக்கறை கொள்ளத் தேவையில்லை என இராஜதந்திர புத்திஜீவிகள் அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கி வருகின்றனர்.  இவ்வாறான இராஜதந்திர ஆலோசனைகளுடன் நாம் முன்னர் குறிப்பிட்டது போன்ற இலங்கையின் புவியியல் தன்மையும் பல்லினத் தன்மையும் ஒழுங்கமையவில்லை. ஆகவே தான் சமஷ்டி ஆட்சி பற்றிய பேச்சுகளுக்கு அவ்வளவு ஆதரவும் முக்கியத்துவம் இல்லாமல் போயிற்று எனலாம். இருந்தும் தெற்கில் சில சிங்களத் தலைவர்களாலும் அதேவேளை சில தமிழ்த் தலைவர்களாலும் சமஷ்டி வாதம் முன்வைக்கப்படுகிறது. நிலப்பரப்பில் சிறிய அலகைக் கொண்ட இலங்கையில் சமஷ்டியை விட வேறு ஏதாவது தீர்வுகள் பற்றிய யோசனைகள் சாத்தியப்படுமிடத்து அதனூடாக அதிகார பரவலாக்கம் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் தமிழ் மக்கள் பாதிக்கப்படுவது என்பது இல்லாமல் போகும். அதேவேளை பெரும்பான்மையினரின் அரசியல் நீரோட்டத்தினையும் பாதிக்காத விதத்தில் அமையும். இது நிரந்தர சமாதானத்தினையும் உருவாக்குவதுடன்  குறுகிய இனவாத போக்குகளை களைந்து பரந்துபட்டதோர் அரசியல் நோக்கில் சமத்துவமாக வாழ வழியமைக்கும் என்பதில் ஐயமில்லை. இவ்வாறானதொரு விரிந்த நோக்கிலான கொள்கைகள் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுவது ஊடாக அடிமை வாழ்வு அற்றுப்போகும். ஆனால் ஆட்சிக்கு  வரும் பெரும்பான்மை ஆதரவு பெற்றவர்களின் செயற்பாடுகளில் தான் அது அமைந்துள்ளது. மாறாக அதிகாரத்தில் உள்ளவர்கள் மேலும் தமது அதிகாரங்களை அதிகரித்துக் கொள்ளும் நோக்கிலேயே அரசியலமைப்பை மாற்றியமைத்த வண்ணமே இருக்கின்றனரே ஒழிய எவரும் இதுவரையில் அதிகாரங்களை பரவலாக்கம் செய்வதனூடாக அனைவரதும் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்ற முடியும் என்ற நோக்கில் செயற்படுவதாக இல்லை. 

அன்றைய அரசியல் தலைவர்கள் தொடக்கம் இன்றுவரை உள்ளவர்கள் சமஷ்டியில் தீர்வு , பேச்சுவார்த்தையில் தீர்வு,  நல்லிணக்கத்தால் தீர்வு,  அதிகாரபரவலாக்கத்தினால் தீர்வு என்று ஏராளமான  வாக்குறுதிகளை வழங்கிக் கொண்டே இருக்கின்றனர்.  ஆனால் அவை நடைமுறைச் சாத்தியமானதொரு நிலை இன்றுவரை இலங்கையின் சரித்திரத்தில் இடம்பெறவில்லை. தமிழ் மக்களது பிரச்சினைகளுக்கும் உரிமைகளுக்காகவும்  முழுமையாக சர்வதேசத்தை நம்பியிருப்பது என்பதும் "மண் குதிரையினை நம்பி ஆற்றில் இறங்கினால் போல' என்கின்ற ஒரு நிலைப்பாட்டினை ஏற்படுத்தியிருக்கிறது எனலாம். ஏனென்றால் சில ஐரோப்பிய நாடுகளும் அவற்றின் தீர்மானங்களும் எமக்கு பறைசாற்றி நிற்கின்றன. அவற்றின் செயற்பாடுகள் யாவும் கடந்த காலங்களில் நாம் அனைவரும் அவதானிக்கத்தக்கதொருவகையிலும் அமைந்திருந்தது. காலங்கடந்த நிலையில் தீர்மானங்களை எடுப்பதில் இவர்கள் வல்லவர்கள். மத்தியஸ்த ஐ.நா.வும் அப்படித்தான். அதனையே ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் அவர்கள் மனம் திறந்து பேசும்போது வெளிப்பட்ட கருத்து எடுத்தியம்புகிறது. மக்கள் இக்கட்டான சூழ்நிலையில் சிக்கிக் கொண்டு அழிவை எதிர்நோக்கிய பொழுதெல்லாம் பார்த்துவிட்டு எந்த நடவடிக்கையும் எடுக்காத ஐ.நா. சபையும் கூட ஏராளமானவர்கள் அழிந்துவிட்ட நிலையிலும் உடமைகள் சேதமாக்கப்பட்ட பின்னர் அறிக்கைகளை கோவைப் படுத்தி மேசைகள் மீது அடுக்கி வைத்து விட்டு விவாதம் நடத்துகிறதே தவிர நிரந்தர தீர்வுக்கான முயற்சிகள் மந்த கதியிலேயே இடம்பெறுகின்றன. இந்த காலகட்டத்தில் தான் தமிழ் மக்கள் மாகாண சபைத் தேர்தலில் தமிழ் பிரதிநிதிகளுக்கு தீர்வு பெற்றுத் தருவதற்கான ஆணையினை வழங்கியுள்ளனர். இதனை சரிவரப்  பயன்படுத்தி மாகாண சபை அதிகாரங்களையும் குறையேதும் இல்லாமல் முழுமையாக பெற்றுக் கொள்வதுடன் அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொள்ளும் கோரிக்கையினையும் முன்வைக்க வேண்டும். சமஷ்டி நடைமுறைச் சாத்தியமற்றதாக இருப்பது போல் தென்பட்டாலும் அதிகாரப் பகிர்வு சாத்தியமாக காலம் கனிந்து வரும் .

No comments:

Post a Comment